Saturday, April 19, 2014

வாசன் அய்யா தமிழ் நாட்டின் அடிப்படை பிரச்சனைகளை பேசுகின்றார் ஈழத் தமிழர் போன்ற திசை திருப்பும் விவகாரங்களை  பேசி மக்களின் கவனத்தினை திருப்பும் அதிமுக திமுக அதன் துணை அமைப்புகள் அதன் ஐந்தாம் படைகள் தமிழர்களின் கவனத்தினை திசை திருப்பி விட்டன. மின்வெட்டு குடிநீர்போன்ற பிரச்சனைகளை பேசினால் திமுக அதிமுகவினர் பதில் சொல்ல வேண்டி வரும். உள்ளூரிலே கூரை ஏறி  கோழி பிடிக்க முடியாதவர்கள் பாராளுமன்றம் சென்று இந்தப் பாரத தாய்த்திருநாட்டை காப்பாற்றப் போகிரார்களாம். மாநில நிர்வாகத்தினையும் உள்ளாட்சி நிர்வாகத்தினையுமே அதிமுக திமுகவினரால் சரியாகச் செய்ய முடியவில்லை. ஒரு காலத்தில் காங்கிரஸ் ஆட்சியில் சிறப்பாக செயல்பட்ட கூட்டுறவுச் சங்கங்கள் எல்லாம் முடக்கப்பட்டு விட்டன. முல்லைப் பெரியார் பிரச்சனையிலும் காவிரி பிரச்சனையிலும் ஒரு இணக்கமான தீர்வுக்கு கழகங்கள் அனுமதிக்காது. இந்தப் பிரச்சனையை ஊதிப் பெரிதாக்கினால் கழகங்களின் அரசியல் வாழ்க்கை சிறப்பாக இருக்கும்.  இன்று எந்த அரசு அலுவலகத்திற்கு சென்றாலும் உங்கள் பணம் கொள்ளையடிக்கப்படுகின்றது. புழுதி பறக்கும் சாலைகள் மோசமான உள்ளாட்சிகளையும் மோசமான மாநில அரசினையும் சுட்டிக் காட்டுகின்றது.மின்வெட்டு பிரச்சனை பத்தாண்டுகளாக நீடிக்கின்றது. திறந்த வெளிக் கழிப்பறைகள் குடிநீரை விலைக்கு விற்கும் அவலம் இதையெல்லாம்  மறைக்க அதிமுக சீமானை வைத்து இலங்கைப்பிரச்சனை நாடகத்தினையும் ஹெலிகாப்டர் பிரச்சார நாடகத்தினையும் நடத்திக் கொண்டிருக்கின்றது . அலங்காரச் சொல்லும் அடுக்கு மொழியும் கோலோச்சிக் கொண்டிருந்த காலம் போய் அதிமுகவும் திமுகவும் குஷ்பு விந்தியா போன்ற நடிகைகளின் பிரச்சாரத்தினை நம்பியிருக்கும் காலமல்லவா.வீதிக்கு வராத தலைவர்கள் வீட்டிற்கு  வராத தலைவர்கள். இவர்கள் தமிழகத்தின்  தலைவிதியை நிர்ணயம் செய்யலாமா? பச்சைத் தமிழர்களே அடிமைகளாய் இருந்து கைகட்டி சேவகம் செய்தே காலம் கடத்தப் போகின்றீர்களா ? அல்லது வாசன் ஈவிகேஎஸ்.இளங்கோவன சிதம்பரம் திருநாவுக்கரசர்  சுதர்சன நாச்சியப்பன் பிரபு போன்ற தலைவர்களின் பின்னே அணிவகுத்து ஒரு திருப்பு முனையை ஏற்படுத்த போகின்றீர்களா.  இதோ வாசன்  தமிழ்நாடு காங்கிரசின் பாதையை சுட்டிக் காட்டுகின்றார் ! ! !

No comments:

Post a Comment