Sunday, August 3, 2014

2016 சட்டமன்றத்தேர்தல்கள் நெருங்குகின்றன. அதிமுக தேர்தலுக்கு தயாராகின்றது காங்கிரஸ் என்ன செய்து கொண்டிருக்கின்றது தேர்தலுக்கு தயாரா? அல்லது கூட்டணிகளை எதிர்பார்த்து வேட்பு மனுத்தாக்கல் வரை காத்திருந்து யாரும் ஒரு இருபது சீட்கள் கூட கொடுக்க முன்வரா விட்டால் கிடைக்கின்ற வேட்பாளர்களை வைத்து தேர்தலைச் சந்திக்கும் வழக்கமான பார்முலா தானா?  அமெரிக்காவின் உள்நாட்டு போரில் சொல்லப்பட்ட பிரபலமான வாக்கியம் ஒன்று நினைவுக்கு வருகின்றது. ஒன்றாகப் போரிடாவிட்டால் தனித்தனியாக தூக்கிலிடப்படுவீர்கள். தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர்கள் ஜாம்பவான்கள் தான். ஆனால் தனித்தனியாக தூக்கில் தொங்கத் தான் தயாராக இருக்கின்றார்கள் என்று மக்கள் நினைக்கின்றார்கள். தொண்டர்களின் ஆதரவு பெற்ற அய்யா ஜி.கே.வாசன், துணிச்சலான கருத்துக்களால் மக்களின் மத்தியில் ஆதரவு பெற்றிருக்கும் ஈ.வி.எஸ் இளங்கோவன். ப.சிதம்பரம் அவர்கள் பிரபு அனைவரையும்  அனுசரித்து செல்லும் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் தற்போதைய தலைவர் ஞானதேசிகன்அவர்கள் மற்றும் எத்தனை பேர்கள் சுதர்சன நாச்சியப்பன், திருநாவுக்கரசர் , ஜே.எம். ஹாரூன் விடியல் சேகர் போன்ற முன்னாள் இளைஞர் காங்கிரஸ் தலைவர்கள் மாணிக் தாகூர் ஜோதிமணி போன்ற காங்கிரஸ் துணைத்தலைவர் இராகுலின் அன்பிற்குரிய இளைய முகங்கள் அமெரிக்கை நாரயணன், பீட்டர் அல்போன்ஸ் கோபண்னா போன்று மீடியாக்களில் போரடிக்கொண்டிருக்கும் முகங்கள்.நூற்றுக்கணக்கான,  மக்கள் மத்தியில் அறிமுகமான முகங்கள்  இரண்டு நாள் தான் விருப்ப மனு வாங்கப்பட்டது எத்தனை பேர் மனுக் கொடுத்தார்கள் 1000 பேருக்கு மேல் ! காங்கிரஸிற்கு தேர்தலில் நிற்க எங்கே ஆள் என்று கேட்ட போது ஆயிரக்கணக்கான காங்கிரசார் ஒடி வந்தார்களே. பொய்யும் மெய்யும் கலந்த ஒரு மோசடியான பிரச்சாரத்திற்கு காங்கிரஸ் பலிகடா ஆக்கப்பட்ட போதும் காங்கிரஸ் மீது தமிழ்நாட்டில் 18 இலட்சம் மக்கள் நம்பிக்கை தெரிவித்து வாக்களித்தார்கள். தமிழ்நாடு பால் உற்பத்தியாளர் சங்கம் போன்ற அமைப்புகள் காங்கிரசிற்கு வாக்களித்தனவே. இத்தனை நாட்களாக கூட்டணி என்ற பெயரிலேயே தமிழ்நாடு காங்கிரஸ் காலம் தள்ளிக் கொண்டிருந்தது. அந்தக் காலம் மலையேறிவிட்டது. அமைப்புகளைப் பலப்படுத்தாமல் பத்திரிக்கைகளின் தவறான பிரச்சாரத்திற்கு பதிலடி கொடுக்காமல் கட்சிக்கூட்டங்களை நடத்தாமல் இப்படி காலம் ஒடினால் இந்த 18 இலட்சம் வாக்குகளும் கேள்விக்குறியாகிவிடும். காங்கிரசு கட்சியே கேலிக்குரியதாகி விடும் என்று எச்சரிக்கின்றேன். ஆட்சியின் மீதான அதிருப்தியை வாக்குகளாக மாற்றுவது எதிர்க்கட்சி வளர்வதற்கான வழி.இந்த மீடியாயுகத்தில் காங்கிரஸ் பாயும் புலியாக இருந்தால் மட்டுமே மீடியாவின் கடைக்கண்ணிலாவது பட முடியும். காங்கிரசின் தூங்கிக் கொண்டிருக்கும் அனைத்து அமைப்புகளையும் தட்டி எழுப்புங்கள். இளைஞர் காங்கிரஸ் மாணவர் காங்கிரஸ் தொழிலாளர் அமைப்புகள் சிறுபான்மையோர் தலித் அமைப்புகள் வழக்குரைஞர் அமைப்புகள். இந்த அமைப்புகளை ஒருங்கினைத்து செயல்பட வேண்டியது தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் கடமை. மாநிலங்களவை மக்களவை சட்டமன்றம் உள்ளாட்சிகள் என வாய்ப்புகள் ஏராளம் ஏன் உட்கட்சி சண்டை இருக்கின்றது என்று மக்கள் நினைக்க வாய்ப்பு கொடுக்க வேண்டும். ஒன்றாகச் சேர்ந்து யுத்தம் நடத்துங்கள் அல்லது தொடர்ந்து தோல்வி அடைய வேண்டியது தான். மன மாச்சரியங்களை களைந்து தோள் மேல் கை போட்டு பணிகளை யாராவது மூத்த தலைவர் தொடங்கினால் தொண்டர்கள் அந்தத் தலைவரின் பாதம் பணிவார்கள். இன்னும் 20 மாதங்களே இருக்கின்றன. காங்கிரஸ் இப்போதே பணியினைத் தொடங்கினால் கணிசமான வாக்குகளையும் சில தொகுதிகளையும் வெல்லலாம்.பத்துவருடம் போராடினால் இழந்த ஆட்சியை மீட்கலாம். அரசியல் சூழ்நிலைகள் சாதகமாக இருக்கின்றன. தமிழ்நாட்டு அரசியலை ஆட்டிப்படைத்த இரு தலைவர்கள் ஒய்வு பெறும் வயதை கடந்து விட்டார்கள். அவர்கள் கையில் இனிமேலும் பொறுப்புகளை கொடுக்க தமிழக மக்கள் தயாராக இல்லை. காங்கிரஸ் தலைவர்கள் கூட்டாக எப்படி நடந்து கொள்ளப்போகின்றார்கள் மீடியாவை தம் வசமாக்கப் போகின்றார்களா என்பதையெல்லாம் பொருத்து காங்கிரசின் எதிர்காலம் இருக்கப் போகின்றது. மீண்டும் எச்சரிக்கின்றேன். இன்னும் 20 மாதங்கள் தான் இருக்கின்றது. ஆனால் 20 மாதங்கள் அரசியலில் மிக நீண்ட காலம். மக்கள் மனதினை வெல்லும் யுத்தத்தினை தொடங்குங்கள் காங்கிரஸ் தலைவர்களே நாங்கள் தயார்

No comments:

Post a Comment